×

பள்ளியை இடித்து பாஜ கம்பம்: 4 நிர்வாகிகள் கைது

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூர் அருகே மரவநத்தம் கிராமத்தில் தனியார் பள்ளி தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளி வளாகத்தின் சுற்றுச்சுவர் மற்றும் கழிவறைகள் கடந்த சில தினங்களுக்கு முன்பு பொக்லைன் இயந்திரம் மூலம் மர்ம நபர்களால் இடிக்கப்பட்டது. இதுதொடர்பாக பள்ளியின் தாளாளர் கலெக்டர் மற்றும் எஸ்பி அலுவலகங்களில் புகார் அளித்தார். இந்நிலையில் கட்டிடங்கள் இடிக்கப்பட்ட பகுதியில் திடீரென பாஜ கொடிகம்பம் நடப்பட்டது. இதுதொடர்பாக பாஜ மாவட்ட தலைவர் செல்வராஜ், பாஜ கலை மற்றும் கலாசார பிரிவு மாவட்ட தலைவர் சுரேஷ், துணைத்தலைவர்களான மணிகண்டன், வெங்கடேஷ் ஆகிய 4 பேரையும் நேற்று முன்தினம் கைது செய்தனர்.

The post பள்ளியை இடித்து பாஜ கம்பம்: 4 நிர்வாகிகள் கைது appeared first on Dinakaran.

Tags : Baja Kampam ,Perambalur ,Maravanantham ,V. Kalathur ,Baja Gampam ,Dinakaran ,
× RELATED மண்வளம் காத்து அதிக மகசூல் பெற...